இளைஞன் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்; பணம், கைத்தொலைபேசியும் கொள்ளை..!!
Read Time:1 Minute, 0 Second
இருபது வயது இளைஞன் ஒருவனிடம் இருந்து பணத்தையும் பொருட்களையும் கொள்ளையிட்ட பின் இளைஞனை கடலோரத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஐந்து இளைஞர்களை அஹங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞன் கடலோர வீதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரைத் தாக்கி 5 ஆயிரம் ரூபா பணத்தையும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் இவர்கள் கொள்ளையிட்டு இளைஞனைக் கடலோரம் கடத்திச் சென்று தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியதற்காக கடந்த வியாழக்கிழமை அஹங்கம பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
Average Rating