கோழிச்சண்டை பந்தயத்தில் ஈடுபட்ட ஐவர் கைது..!!
Read Time:39 Second
வெலிகம, பலான பாலத்துக்கருகில் கோழிச் சண்டை பந்தயத்தை நடத் திக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து இரு கோழிகள் கைப்பற்றப்பட்டன. பந்தயத்தை நடத்தியோரும் ஏனையோரும் பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓடிய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Average Rating