படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 48 பேர் தமிழகத்தில் கைது..!!
Read Time:1 Minute, 26 Second
தமிழ் நாட்டிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 48பேரையும் இந்தியர் ஒருவரையும் இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாகபட்டிணம் மாவட்டத்திலுள்ள வேளாங்கன்னி நகரில் நகரிலுள்ள நேற்று வெள்ளிக்கிழமை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்நகரிலுள்ள விடுதிகளில் இவர்கள் தங்குமிடம் தேடிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களில் 35 ஆண்கள், 6 மாத கர்ப்பிணி உட்பட 4 பெண்கள் 6 சிறுமிகள் 4 சிறுவர்கள் ஆகியோரும் அடங்கியிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மேட்டுப்பாளையும், பெரம்பலூர், மண்டபம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுகல், மதுரை, சேரம் உட்பட பல நகரங்களிலுள்ள அதிக முகாம்களில் இருந்து கடந்த வியாழனன்று இவர்கள் நாகப்பட்டிணத்துக்குசென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating