முதலை முட்டை வைத்திருந்தவர் கைது..!!
களுத்துறை, ஹெட்டிமுல்ல பிரதேச வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 முதலை முட்டைகளை கைப்பற்றியுள்ள பொலிஸார், அவற்றை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரையும் நேற்று கைது செய்துள்ளனர்.
ஊர்வன இனத்தைச் சேர்ந்த அரியவகை இரு முதலையினங்களை இலங்கையில் காணக்கூடியதாக உள்ளது. இவற்றில் ஓரினம் இலங்கையின் குளிர் வலயப் பிரதேசத்திலும் மற்றைய இனம் வெப்ப வலயத்திலும் காணப்படுகின்றன.
இலங்கைக்கே உரித்தான உயிரினங்களில் முதலை அடங்காவிடினும் அவை, வனவிலங்குகள் மற்றும் அரிய உயிரின பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் மிகவும் பாதுகாப்பான மிருகமாக அறிவிக்கப்பட்டவையாகும்.
இதனால், முதலைகளை பிடித்து தம்வசம் வைத்துக்கொள்ளல், கொலை செய்தல், இறைச்சிக்காக விற்பனை செய்தல் அல்லது இறைச்சியை தம்வசம் வைத்திருத்தல், முதலையினங்கள் வாழுமிடங்களை அழித்தல், முட்டைகளை அழிதத்தல், முட்டைகளை தம்வசம் வைத்திருத்தல் போன்றன மேற்படி சட்டத்தின் கீழ் குற்றங்களாக கருதப்படுகின்றன என்று சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முதலை முட்டைகளை அவை இருந்த இடங்களிலிருந்து அகற்றி தம்வசம் வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating