யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்களை கொல்ல புலிகள் முயன்றனர்-சட்டமா அதிபர்..!!
யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்கள் பலரை புலிகள் படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
முக்கியஸ்தர்களை கொலைச்செய்வதற்கு முயன்றது மட்டுமன்றி பொருளாதார மையங்களை தாக்குவதற்கும் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்களிக்களிலும் முச்சக்கரவண்டிகளிலும் வெடிப்பொருட்களை பொருத்தியே புலிகள் தாக்குதல் நடத்த முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமையில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சந்தேகநபரான பெர்னாண்டோ எமில்டன் என்பவரின் அளித்த வாக்குமூலத்திலேயே புலிகளின் திட்டங்கள் அம்பலமாகியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆயினும், யுத்தநிறுத்தம் முடிவுக்கு வந்தபோது அந்த திட்டங்களை கைவிடவேண்டியதாயிற்று என்றும் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating