நதீகா லக்மாலி உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் இறுதிப் போட்டிக்கு தகுதி..!!
Read Time:1 Minute, 29 Second
ஈட்டி எறிதல் மகளிர் பிரிவில் உலகின் தலைசிறந்த 12 வீராங்கனைகள் வரிசையில் இலங்கையின் நதீகா லக்மாலி நேற்று இடம்பிடித்துள்ளார்.
14 ஆவது உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளில் நேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியின்போது அவர் இந்த வாய்ப்பினை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவில் மொஸ்கோவில் நடைபெற்றும் இந்தப் போட்டிளின் ஈட்டி எறிதல் மகளிர் பிரிவு தகுதிகாண் போட்டிகள் நேற்றுக்காலை நடைபெற்றன.
‘பி’ பிரிவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய நதீகா லக்மாலி 60 தசம் மூன்று ஒன்பது மீற்றர் தூரத்துற்கு ஈட்டியை எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
குறுந்தூர ஓட்ட வீராங்களை சுசந்திக்கா ஜயசிங்கவை அடுத்து உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற முதலாவது வீராங்களை என்ற பெருமையையும் நதீகா லக்மாலி தன்வசப்படுத்தியுள்ளார்.
Average Rating