காதலனைச் சந்திக்க பெண் பொலிஸ் சீருடையில் சென்ற யுவதி கைது..!!
காதலனைச் சந்திக்க பெண் பொலிஸ் சீருடையில் சென்று அநுராதபுரம் நொச்சியாகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட யுவதி ஒருவரை பொலிஸார் தம்புத்தேகம நீதிமன்றத்தில் ஆஜர்செய்துள்ளனர்.
இதன்போது குறித்த யுவதியை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் சாமர கெக்கிரிதெனிய உத்தரவிட்டுள்ளார்;.
நுகேவெல, பெரிவெல பிரதேசத்தைச் சேர்ந்த கே.பி. நில்மினி மல்குமாரி என்ற யுவதியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
பெண்பொலிஸ் சீருடையில் இருந்த சந்தேகநபர் காதலனுடன் நொச்சியாகம பஸ்நிலையத்தில் நின்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலன் தன்னை கைவிட முயற்சிப்பதால் காதலனை அச்சுறுத்த பொலிஸ் சீருடையில் வந்ததாக யுவதி தெரிவித்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான யுவதி அனுராதபுரம் பிரதேசத்தில் பாதுகாப்புப் பிரிவினருக்கு சீருடை விநியோகிக்கும் நிறுவனமென்றில் பொலிஸ் சீருடை தொப்பி முதலியவற்றை கொள்வனவு செய்துள்ளதாகவும் அதற்கு 2400 ரூபா வழங்கியதற்கான ரசீதும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating