காதலனைச் சந்திக்க பெண் பொலிஸ் சீருடையில் சென்ற யுவதி கைது..!!

Read Time:2 Minute, 2 Second

download (26)காத­லனைச் சந்­திக்க பெண் பொலிஸ் சீரு­டையில் சென்­று அநுராதபுரம் நொச்­சி­யா­கம பஸ் நிலையத்தில் நின்­றி­ருந்த நிலை­யில் கைதுசெய்­யப்­பட்ட யுவதி ஒரு­வரை பொலிஸார் தம்­புத்­தேகம நீதிமன்­றத்தில் ஆஜர்செய்­துள்ளனர்.

இதன்போது குறித்த யுவ­தியை எதிர்­வரும் 28 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி நீதவான் சாமர கெக்­கி­ரி­தெ­னிய உத்­த­ர­விட்டுள்ளார்;.

நுகே­வெல, பெரி­வெல பிர­தே­சத்தைச் சேர்ந்த கே.பி. நில்­மினி மல்­கு­மாரி என்ற யுவ­தியே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­வ­ராவார்.

பெண்­பொலிஸ் சீரு­டையில் இருந்த சந்­தே­க­நபர் காத­ல­னுடன் நொச்­சி­யா­கம பஸ்­நி­லை­யத்தில் நின்­ற­போது பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டுள்ளார்.

காதலன் தன்னை கைவிட முயற்­சிப்­பதால் காத­லனை அச்­சு­றுத்த பொலிஸ் சீரு­டையில் வந்­த­தாக யுவதி தெரி­வித்­த­தாக பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளனர்.

சந்­தேகநப­ரான யுவதி அனு­ரா­த­புரம் பிர­தே­சத்தில் பாது­காப்புப் பிரி­வி­ன­ருக்கு சீருடை விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மென்றில் பொலிஸ் சீரு­டை தொப்பி முத­லி­ய­வற்றை கொள்­வ­னவு செய்­துள்­ள­தா­கவும் அதற்கு 2400 ரூபா வழங்­கி­ய­தற்­கான ரசீதும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவர்தான் உலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண்ணாம்..!!
Next post நியூசிலாந்தில் ஓரினசேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்..!!