காதலை வெளிப்படுத்திய இளைஞனை அடித்து வீழ்த்திய யுவதி..!!
தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கோரிய இளைஞனை யுவதியொருவர் கிற்றாரினால் அடித்து வீழ்த்திய சம்பவம் டுபாய் ஷொப்பிங் நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.
ஷொப்பிங் நிலையத்தில் இசைக்குழுவொன்று பாடல்களை பாடிக்கொண்டிருக்க, மேற்படி யுவதிக்கு முன்னால் ஒலிவாங்கியில் பேச ஆரம்பித்த இளைஞன் பேசத் தொடங்கினார்.
‘ஒரு மிக முக்கியமான யுவதிக்காக ஒரு மிக முக்கியமான செய்தி என்னிடமுள்ளது. இங்குதான் நாம் 3 மாதங்களுக்கு முன்னர் முதல் தடவையாக சந்தித்தோம்’ எனக்கூறி யுவதியை புகழ ஆரம்பித்தார். அப்போது, மக்கள் பலர் அங்கு திரண்டிருந்தனர்.
ஆனால் குறித்த யுவதிக்கு இந்த திருமண யோசனை பிடிக்கவில்லை. அதனால் அந்த இளைஞனை செயற்பாட்டை நிறுத்துமாறு யுவதி கோரினார்.
எனினும் இளைஞன் தொடர்ந்தும் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக பேசிக்கொண்டிருந்ததால், சிறிய கிற்றார் ஒன்றினால் இளைஞனை சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.
இளைஞன் நிலத்தில் சாய, கித்தாரை தரையில் வீசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் யுவதி. இந்த காட்சி வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு, இணைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. குறித்த இளைஞன் ஓர் இந்தியர் எனத் தெரிவிக்கப்படுகிறது
Average Rating