மகனே, நீ உயிரோடு தான் இருக்கியா?: யூ டியூப்பில் 4.3 லட்சம் ஹிட்டடித்த பாசப் போராட்ட வீடியோ..!!
Read Time:1 Minute, 4 Second
சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில் இறந்தவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் கிடைத்த சந்தோஷத்தில் அவனை ஓடி வந்து கட்டித் தழுவி அழும் தந்தையின் வீடியோ யூ டியூப்பில் பிரபலமாகியுள்ளது.
சிரியாவில் கடந்த புதன்கிழமை நடந்த ரசாயன தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1,200 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இந்த தாக்குதலில் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்து ஒரு இளம் தந்தை வாடினார். இந்நிலையில் அவரது மகன் உயிருடன் திரும்பி வந்ததைப் பார்த்து அவர் ஓடி வந்து அவனை கட்டித் தழுவிய வீடியோ சிரிய போராளிகளால் யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை இந்த வீடியோவை430,000 பேர் பார்த்துள்ளனர்.
Average Rating