அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 4000 பேர் கைது..!!
Read Time:1 Minute, 21 Second
கடந்த நான்கு வருடங்களில் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 4145 பேர் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி அவுஸ்திரேலியன் செய்திதாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது
இந்தக் காலக்கட்டத்தில் 4500 பேர் வரை அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த நிலையில் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெ அவுஸ்திரேலியன் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்வோர் அங்கு இலங்கையை விட 10 மடங்கு அதிகமாக உழைக்கலாம் என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள் என்று செய்திதாள் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சட்டவிரோத பயணிகளின் பின்னணியில் விடுதலைப்புலிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் உள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தி வருவதாக தெ அவுஸ்திரேலியன் சுட்டிக்காட்டியுள்ளது.
Average Rating