காட்டில் புதையல் தேடிய நால்வர் கைது..!!
Read Time:55 Second
குருநாகல் மாவட்டம் பொல்பித்திகம கபுகேன வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசமிருந்து லொறி ஒன்றும் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் அம்பன்பொல, இப்பாகமுவ, மொரகொல்லாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
நேற்றையதினம் கைதான இவர்கள் இன்று மஹவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating