‘பொலிஸாருக்கு முழந்தாள் தண்டனை’..!!
பொலிஸாருக்கு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவமொன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து சென்ற பொலிஸ் அதிகாரியொருவரே பொலிஸ் சார்ஜன்களுக்கு மேற்கண்டவாறு தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் சார்ஜன்கள் இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு அரைமணித்தியாலம் முழந்தாள் இட்டுள்ளனர்.
இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன் ஒருவரை தண்டிக்கும் வகையிலேயே இந்த தண்டனை அந்த நிலையத்தில் கடமையாற்றும் சகல சார்ஜன்களுக்கும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு முழந்தாளிட்டிருந்த சார்ஜன்களில் இருவர் மயங்கி விழுந்ததை அடுத்தே அந்த தண்டனை இடைநடுவிலேயே நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் யாருக்கும் தெரிவிக்ககூடாது என்றும், அவ்வாறு அறிவிக்கப்படுமாயின் தன்னுடைய பதவியுயர்வுடன் கடும் தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating