பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள ஏற்பாடு
Read Time:1 Minute, 15 Second
இலங்கையில் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்ளவார் என்பது உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் வீ.நாராயணசாமியை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், இதன்படி, பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு விஜயம் செய்வது உறுதியாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது சம்பந்தமாக நேரடியான தகவல்கள் எதனையும் வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating