அழகிய மனைவியை நண்பனிடம், பணத்துக்கு அடகு வைத்த கணவன்
அழகிய மனைவியை நண்பனிடம் பணத்துக்கு அடகு வைத்த கணவன்; திரும்பிச் செல்ல விருப்பமில்லை என மனைவி அடம்பிடிப்பு
போதைவஸ்துக்கு அடிமையான 34 வயதான இரு குழந்தைகளின் தந்தை ஒருவர் தனது அழகிய மனைவியை 25,000 ரூபாவுக்கு அடகு வைத்த சம்பவமொன்று தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் அம்பலத்துக்கு வந்துள்ளது.
தம்புள்ள விஹார சந்தியைச் சேர்ந்த போதைவஸ்துக்கு அடிமையான நபரினால் ஒன்றரை மாத காலத்துக்கு பெற்ற கடனுக்கும் அதற்கான வட்டிக்கும் ஈடாக தமது 30 வயது மனைவியை சுய விருப்பத்தின் பேரில் நண்பனிடம் ஒப்படைத்துள்ளார்.
38 வயதான தம்புள்ள பொஹோரன் வெலியைச் சேர்ந்த நண்பரும் திருமணமானவர். அவர் தனது மனைவிக்குத் தெரியாமல் வேறு பிரதேசமொன்றில் வாடகைக்கு அறையொன்றை எடுத்து அப்பெண்ணை தங்க வைத்து அவருக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார்.
போதைவஸ்துக்கு அடிமையான நபர் குறிப்பிட்ட காலம் முடிவடைந்தும் தனது நண்பனையும் மனைவியையும் சந்தித்து தனது மனைவியை மீட்டுச் செல்ல தயாரான போதும் மனைவி திருமணமான தனது கணவருடன் செல்ல மறுப்புத் தெரிவித்துள்ளார். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் மனைவி தன்னுடன் வர மறுப்பு தெரிவித்ததால் பொலிஸ்நிலையத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் மனைவி, நண்பர் மற்றும் முறைப்பாட்டாளரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க முயற்சித்துள்ளனர்.
தனது கணவர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என்றும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் கணவரின் நண்பர் தன்னை முறையாகப் பராமரித்ததாகவும் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நண்பரும் அவரை ஏற்றுக் கொள்ள சம்மதித்ததை அடுத்து அப்பெண் தனது தாயிடமிருந்த தனது இரண்டு குழந்தைகளுடன் கணவனின் நண்பருடன் சென்றுள்ளார்.
போதைவஸ்துக்கு அடிமையான நபர் மனைவியையும் பிள்ளைகளையும் இழந்து வெறுங்கையுடன் வீடு திரும்பியுள்ளார்.
Average Rating