15 வயது காதலி 18 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம்
15 வயதுடைய காதலியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 18 வயதுடைய காதலனை அல்பிட்டிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து எல்பிட்டிய பிடுவல பகுதியைச் சேர்ந்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாணவியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதோடு மாணவி சிறிய தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சிறியதாயுடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக மாணவி தந்தையின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
தந்தை இரவு நேரக் கடமைக்காக சென்றுள்ள நேரத்தில் காதலனுடன் தொடர்பு கொண்டு வீட்டில் தங்கியுள்ளார். இதன்போதே பாலியல் வல்லுறவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேக நபர் எல்பிட்டிய நீதிவான் எஸ்.சமரதிவாகர முன்னிலையில் ஆஜர் செய்த போது ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தார்.
Average Rating