உடற்கட்டழகு போட்டியில் கவனத்தை ஈர்த்த இரு கைகளையும் இழந்த பெண்!!
இரு கைகளையும் இழந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் நடைபெற்ற 2013 ஐ.எப்.பி.பி வட அமெரிக்க உடற்கட்டழகு சம்பியன்ஷிப் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உலகில் இரு கைகளையும் இழந்த முதலாவது உடற்கட்டழகி என நம்பப்படும் 37 வயதான பார்பி தோமஸ் என்ற பெண்ணே இவ்வாறு அனைவரையும் தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மதிப்புமிக்க உடற்கட்டழகு போட்டியில் இவர் பங்கு பற்றிய பிரிவில் 6 பேர் பங்குகொண்டுள்ளனர். இதில் தோமஸ் 5ஆம் இடத்தினைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இரண்டு வயதாக இருக்கும் போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளும் எரிந்துள்ளது. ஆனால் தோமஸ் இரு கைகளையும் இழந்தாலும் அனைத்து வேலைகளையும் சுயமாகவே மேற்கொள்கிறார்.
இது குறித்து 3 குழந்தைகளுக்கு தாயான தோமஸ் கூறுகையில், நான் ஒரு முன்னுதாரணம் என மக்கள் என்னைக் கூறுகின்றனர்.
ஆனால் என்னை நான் சாதாரணமாகவே பார்க்கிறேன். சிறுவயதில் கைகளை இழந்ததால் இலகுவாக என்னால் கைகள் இல்லாம் வாழ முடிகிறது. என்னால் எதுவும் செய்ய முடியாமல் போனது இல்லை.
எனது பெற்றோர் என்னை சிறுவயதிலிருந்து ஊக்கப்படுத்துகின்றனர். அதேபோல என்னை ஊக்குவிக்கும் நண்பர்கள் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். இதனாலேயே என்னால் உடற்கட்டழகில் ஆர்வமாக ஈடுபட முடிந்தது.
போட்டியில் எனக்குப் பின்னாலும் ஒருவர் உள் ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
என்னைப் பற்றி அடுத்தவர் கவலைப்படத் தேவையில்லை. இது கடவுளின் திட்டம் என நான் உணருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இரு கைகளையும் இழந்தாலும் பாடசாலைப் பருவத்தில் நீச்சல், நடனம், உதை பந்தாட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.
ஏனையோரைப் போல வாகனம் ஓட்டுதல், சமைத்தல், மின்னஞ்சல் எழுதுதல் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் இவரால் சுயமாக ஈடுபட முடியுமாம்.
இது மட்டுமன்றி மொடலிங்கில் ஈடுபடு வதுடன் நடிப்பிலும் தோமஸ் ஆர்வமாகவுள்ளார்.
Average Rating