சுழியோடியின் கெமராவை பறித்துச் சென்ற சுறா
சுழியோடி ஒருவரின் புகைப்படக் கருவி மற்றும் உபகரணங்களை சுறாவொன்று பறித்துச் சென்ற சம்பவம் பஹாமஸ் கடற்பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
49 வயதான மிகுவெல் லசா எனும் இச்சுழியோடி சுறாக்களை படம்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய சுறாவொன்று லசாவின் 23 இலட்சம் ரூபா பெறுமதியான கெமராவை தனது வாயினால் கௌவிக் கொண்டு சென்றது.
அச்சமூட்டும் விலங்குகளான சுறாவிடமிருந்து கெமராவை மீட்க வழி தெரியாத நிலையில் மிகுவெல் லசா தவித்துக்கொண்டிருந்தார். ஒரு கிலோமீற்றர் தூரத்தை சில நிமிடங்களில் கடக்கக்கூடிய சுறா அது.
ஆனால், அதிஷ்டவசமாக அவர் நீந்திக்கொண்டிருந்த இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் கெமராவை போட்டுவிட்டு சுறா சென்றது. ஆவருடன் சென்றிருந்த மற்றொரு சுழியோடி இக்காட்சிகளை தனது கெமராவில் பதிவு செய்து கொண்டார்.
Average Rating