தேர்தல் ஏற்பாடுகள்..
Read Time:1 Minute, 6 Second
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
வாக்குபதிவுகள் அனைத்தும் மாலை நான்கு மணிக்கு நிறைவு செய்யப்படும்.
இந்த தேர்தல்களுக்காக, 126 அரசியல் கட்சிகள் மற்றம் 75 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 3 ஆயிரத்து 785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை வாக்குப் பதிவுகளுக்காக 43 லட்சத்து 63 ஆயிரத்து 252 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மொத்தமாக 3 ஆயிரத்து 712 வாக்கு பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப் பெட்டிகளுடன், தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating