வாக்களித்து விட்டு திரும்பிய அதிபர், ஆசிரியை கைது
மன்னாரில் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது பாடசாலை அதிபரான அருட்சகோதரர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், விசாரனைகளின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
மன்னார் கருங்கண்டல் ம.வி பாடசாலையின் அதிபரும், அருட்சகோதரருமான செபஸ்தியாம் பிள்ளை கிறிஸ்ரி விஜயதாசனும் ஆசிரியை ஜோதினி குரூஸ் ஆகியோர் இன்றுகாலை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பின்னர் வெளியில் வந்த இவர்கள் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேவேளை இவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டே கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating