வாழைச்சேனை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கிளைமோர் கண்டுபிடிப்பு
Read Time:1 Minute, 24 Second
மட்டக்களப்பு வாழைச்சேனையிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திலிருந்து கிளைமோர் குண்டொன்று நேற்று பிற்பகல் 3.30மணியளவில் படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் சிவா என்பவரை இலக்குவைத்து அவரது அறையிலுள்ள கடிகாரத்தில் கிளைமோர் குண்டு பொருத்தி வைக்கப்பட்டிருந்தபோதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடிகாரத்தில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமோரை சிவா கண்டு உடனடியாக படையினருக்கு அறிவித்தபின் அது மீட்கப்பட்டுள்ளது. அது பிற்பகல் 3.46மணிக்கு வெடிக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2ம்திகதி வாழைச்சேனையிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திற்குள் தஞ்சம் புகுந்த சிவாவின் உறவினர் ஒருவரே சிவா இல்லாத வேளையில் மேற்படி குண்டை பொருத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.