தாயின் நகையை ஈடு வைத்து, ஹெரோய்னுக்கு செலவிட்ட மகன் கைது!!
Read Time:56 Second
தாயின் ஐந்து பவுண் தாலிக்கொடியை அடகு வைத்து பெற்ற ஒன்றறை இலட்ச ரூபா பணத்தை ஹெரோயினுக்காக செலவிட்டதாக கூறப்படும் மகனை பொரளை பொலிஸார் கடந்த முதலாம் திகதி கைது செய்தனர்.
சந்தேக நபரான மகன் தங்கத் தாலியை பொரளை பிரதே சத்திலுள்ள அடகு கடையொன்றில் அடகுவைத்து முழு பணத்துக்கும் ஹெரோயின் புகைத்துள்ளதாக பொலி ஸார் தெரிவித்திருக்கின்றனர்.
சந்தேக நபர் 33 வயதான திருமணமாகாத நபரே கைதானவராவார். இவரை தொடர்ந் தும் விசாரணைக்குட்படுத்தி வரும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின் றனர்.
Average Rating