டாக்டரை கொலை செய்த கைதிக்கு மரண தண்டணை
டாக்டர் ஒருவரின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதனையடுத்து அவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அநுராதபுரம் – பொத்தனேகமவில பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான இந்த இந்த நபர் 26 வயதான டாக்டர் ஒருவரைக் கொலை செய்தார் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கின் விசாரணை இறுதியிலேயே அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
குறித்த கொலையை நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லாமையால் விசாரணையின் சாட்சிகளை ஆதாரமாகக் கொண்டே இவருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
18 குற்றச்சாட்டுக்களுக்காக 31 வருட கால சிறை தண்டனை அனுபவித்து இந்த நபர் சிறையிலிருந்து தப்பி வந்து பதவிய வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வசித்து வந்த டாக்டர் ஒருவரைக் கொலை செய்திருந்தார்.
டாக்டரின் வீட்டில் கொள்ளையிடும் நோக்கத்தில் சென்ற இவர் டாக்டர் கூச்சலிட்டவே அவரைப் படுகொலை செய்தார்.
Average Rating