ஈழத்தமிழர் மீனவர் பாதுகாப்பு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
Read Time:55 Second
ஈழத்தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசாங்கம் தலைமையிலான கூடுகிற கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இந்திய அரசு, இலங்கை அரசுக்கு போர்க்கப்பலை வழங்கக் கூடாது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்துநிறுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
Average Rating