பாகிஸ்தான் ரயிலில் குண்டு வெடிப்பு 7 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம்!!
Read Time:1 Minute, 19 Second
பாகிஸ்தானில் பயணிகள் ரயில் ஒன்றினுள் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 16 பலத்த காயம் அடைந்துள்ளனர் .
நேற்று ராவல் பிண்டியில் இருந்து ஜப்பார் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் பாகிஸ்தான் மாகாணத்தில் கேரா முராத் ஜமாலி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போதே சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதன்போது ரயிலில் சென்ற 7 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பில் ரயிலின் 4 பெட்டிகள் நொறுங்கி சேதம் அடைந்துள்ளன. தகவலறிந்து சென்ற மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ரயிலில் வைக்கப்பட்ட குண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கிளர்ச்சியாளர்கள் வெடிக்க செய்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
Average Rating