அநாதரவாக கிடந்த தங்க நகைகளை விற்பதற்கு சென்ற காதலர்கள் கைது!!

Read Time:2 Minute, 39 Second

love-006பத்­த­ர­முல்ல பிர­தே­சத்­தி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் உரி­மை­யாளர் இன்றிக் கிடந்த 15 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களை எடுத்து விற்­பனை செய்யச் சென்ற கேகாலை கலி­க­மு­வையைச் சேர்ந்த ஒரு­வ­ரையும் அவ­ரது காத­லி­யையும் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றை அடுத்து கடந்த 5 ஆம் திகதி மாலை கேகா­லையில் வைத்து பொலிஸார் கைது செய்­தனர்.

இந்த இரு­வரும் கைது செய்­யப்­பட்ட போது ஒரு தங்க வளையல் அடகு வைக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் ஏனைய அனைத்து தங்க நகை­களும் கைப்­பற்­றப்­பட்­டது.

பத்­த­ர­முல்ல பிர­தே­சத்­தி­லுள்ள ஹோட்­டலில் கட­மை­யாற்றும் இந்த சந்­தேக நபர் பார்­சலில் தங்க நகைகள் இருப்­பதைத் தெரிந்து கொண்டு கலி­க­மு­வ­யி­லுள்ள தமது வீட்­டுக்குச் சென்­றுள்ளார். பின்னர் அங்கு தமது காத­லி­யையும் அழைத்துக் கொண்டு கேகா­லை­யி­லுள்ள நகை அடகு பிடிக்கும் நிலை­யத்­துக்கு நகை­களை ஈடு வைப்­ப­தற்­காகச் சென்­றுள்ளார்.

அடகு பிடிக்கும் நிலை­யத்தில் இவர்கள் இருந்த போது பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றை அடுத்து இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். சந்­தேக நபர் தமது காத­லி­யிடம் நண்­ப­ரொ­ருவர் அடகு வைப்­ப­தற்­காக தம்­மிடம் கொடுத்­த­தாகத் தெரி­வித்­துள்ளார்.

இந்த நகை­க­­ளுக்கு உரி­மை­யாளர் வெலி­கட பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­துடன் சந்­தேக நபர் ஹோட்­ட­லுக்கு கட­மைக்கு வரா­ததால் சந்­தே­க­முற்று அத்­த­க­வலை பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

கலி­க­முவ பல்­ல­பான பிர­தே­சத்தைச் சேர்ந்த 21 வய­தான சந்­தேக நபரையும் மாவனெல்லையைச் சேர்ந்த 18 வயதான இவரது காதலியையும் கேகாலை பொலிஸார் வெலிகட பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) 32 வருடங்களாக கத்தரிக்கப்படாத உலகின் மீக நீளமான மீசை!!
Next post வாவிக்கருகே காதல் ஜோடி கலாட்டா; காதலன் மீது கல்லெறிந்த இளைஞர்கள்