மாநாட்டில் பங்கேற்பதில் மாற்றமில்லை
Read Time:1 Minute, 4 Second
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற போதும் மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் இலங்கையின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாகக் கொள்ளக்கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய அமைப்பு மாநாடு இலங்கையுடனான தனிப்பட்ட இரு தரப்பு கூட்டமல்ல என தெரிவித்துள்ளார்.
மாநாட்டை புறக்கணிப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என ஜோன் கீன் தெரிவித்துள்ளார்.
Average Rating