ஆகாயத்தை நோக்கி பிஸ்டலினால் சுட்டு அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம்
பிஸ்டலால் ஆகாயத்தை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்து 21 வயது யுவதியை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி விட்டு பிரதேசத்தை விட்டுத் தலைமறைவாகியுள்ள நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாவலப்பிட்டிய வெலிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதியை தோட்ட பங்களாவுக்கு அழைத்துச் சென்று இவ்வாறு அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிவிட்டு பிஸ்டலால் வெடி வைப்பது எப்படி என விளக்கியதாகவும் பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த நபர் திருமணமானவர் என்றும் விவாகரத்து பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பின்னர் அந்த யுவதியுடன் காதல் தொடர்பு கொண்டு அவரை தோட்ட பங்களாவுக்கு அழைத்து சென்றுள்ளார். வைத்திய பரிசோதனைகளுக்காக இந்த யுவதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating