மாணவியுடன் இரவைக் கழித்த, கணனி பாட ஆசிரியரை, மரத்தில் கட்டி வைத்த மக்கள்
நள்ளிரவில் வீடொன்றுக்குள் புகுந்து 13 வயது பாடசாலை மாணவியுடன் இரவைக் கழித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற ஆசிரியரொருவரை அயலவர்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
48 வயதான இந்த ஆசிரியர் கடந்த 23 ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணியளவில் சிறுமியின் அறையிலிருந்து வெளியேறியபோது சிறுமியின் தாய் திருடன் என நினைத்து சத்தமிட்டுள்ளார். அங்கு திரண்ட அயலவர்கள் இந்த நபரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
இந்த நபர் சிறுமிக்கு கணனி கற்பிக்கும் ஆசிரியர் என பின்னர் தெரியவந்துள்ளது. கணனி கற்பிக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரான இந்த நபர் சிறுமி மீது அதிக கவனம் செலுத்துவதாக தெரியவந்துள்ளதுடன் ஆசிரியருக்கும் இச்சிறுமிக்குமிடையில் காதல் தொடர்பு இருந்துள்ளதா என்பது குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating