(VIDEO) வடமாகாண சபையின் EPDP எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்! -விரிவான செய்தி-

Read Time:6 Minute, 4 Second

epdp.kamal-03நெடுந்­தீவு பிர­தேச சபை தலைவர் டானியல் ரொக் ஷி­யனின் படு­கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் EPDP கந்­த­சாமி கம­லேந்­திரன், கொலை செய்­யப்­பட்ட டானியல் ரொக் ஷி­யனின் மனைவி அனிட்டா உள்­ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுதுறை நீதிவான் ஆர்.எஸ். மஹேந்திரராஜா உத்தரவிட்டார்.

இவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்பட்ட விசா­ர­ணை­க­ளி­ல் நெடுந்­தீவு பிரதேச சபை தலைவர் ரொ­க்ஷியன் கொலை செய்­யப்­பட்­ட­மைக்கு அவ­ரது மனைவியும், வட­மா­காண சபை எதிர்க்­கட்சித் தலை­வரும் கொண்­டி­ருந்த தொடர்பே காரணம் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கள்ளத்தொடர்பு ஒன்றின் விளை­வா­கவே நெடுந்­தீவு பிர­தேச சபை தலைவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்தே நேற்றுமுன்­தினம் வட­மா­காண எதிரக்கட்சித் தலை­வ­ரையும், அவ­ருடன் தொடர்­பினைப் பேணி வந்­த­தாகக் கூறப்­படும் இறந்த பிர­தேசசபை தலை­வரின் மனை­வி­யையும், வட மாகாண எதிர்க்­கட்சித் தலை­வரின் உத­வி­யாளர் ஒருவ­ரையும் கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.

கொலைக் குற்­றச்­சாட்டின் பேரில் வட­மா­காண எதிர்­கட்சித் தலைவர் EPDP கந்­த­சாமி கம­லேந்­தி­ர­னையும் அவ­ரது உத­வி­யா­ள­ரான லண்டன் சசீந்­தி­ர­னையும் கைது செய்­துள்ள பொலிஸார் கொலைக்கு உடந்­தை­யாக இருந்த குற்­றச்­சாட்டில், இறந்த பிர­தேச சபையின் தலை­வரின் மனைவி ரெ­க்ஷியன் அனி­டாவை கைது செய்­த­தாக அவர் கூறினார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி நெடுந்­தீவு பிர­தேச சபையின் தலைவர் டானியல் ரொ­க்ஷியன் புங்­குடுத்தீவி­லுள்ள அவ­ரது வீட்டில் மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

44 வய­தான தனது கணவர் விஷம் அருந்தி தற்­கொலை செய்­து­ கொண்­ட­தாக அப்­போது ரொக்ஷி­­யனின் மனை­வி­யினால் கூறப்­பட்­டது. எனினும் இது தொடர்பில் பருத்­தித்­துறை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட நிலையில் சந்­தே­கத்­துக்கு இட­மான குறித்த மரணம் குறித்து பருத்­தித்­துறை நீதவான் நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய யாழ். உதவி சட்ட வைத்­திய அதி­காரி முன்­னி­லையில் பிரேத பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

குறித்த பிரேத பரி­சோ­த­னையின் போது கொலை செய்­யப்­பட்ட நெடுந்­தீவு பிர­தேசசபையின் தலை­வரின் தலையின் பிடரிப் பகு­தியில் துப்­பாக்கிச் சூட்டு காயம் காணப்­பட்­ட­துடன் தலை­யி­லி­ருந்து துப்­பாக்கி ரவை ஒன்றும் மீட்­கப்­பட்­டது. இதனை அடுத்து அவ­ரது மர­ண­மா­னது மனிதப் படு­கொலை என நீதி­மன்­றினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

எவ்­வா­றா­யினும் இது தொடர்­பான சந்­தேக நபர்கள் பருத்­தித்­துறைப் பொலி­ஸா­ரினால் அடை­யாளம் காணப்­ப­டாத நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் விஷேட உத்­த­ர­வுக்­க­மைய விசா­ர­ணைகள் கொழும்­பி­லி­ருந்து சென்ற விஷேட குற்றப் புல­னாய்வுப் பிரிவுப் பொலிஸ் குழு­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களைப் பொறுப்­பேற்று ஐந்து நாட்­க­ளுக்குள் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.

கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் 9 மில்லி மீற்றர் ரக துப்­பாக்­கி­யையும் அதற்கு பயன்­ப­டுத்தும் 11 தோட்­டாக்­க­ளையும், இதன்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் மேலும் குறிப்­பிட்டார்.

அத்­துடன் நெடுந் தீவு பிர­தேச சபையின் தலை­வரை துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்டு கொலை செய்­து­விட்டு கொலை சந்­தே­கநபர்கள் இரு­வரும் தப்பிச் செல்ல பயன்­ப­டுத்­திய மோட்டார் சைக்கிளையும் விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மீட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலருக்கு நாற்பது தையல்: கவலையில் மச்சான்ஸ் நடிகை
Next post தெமட்டகொடையிலிருந்து இரத்மலானை வரை சாரதியின்றி தானாக சென்ற ரயில்..!