இரு காதலர்களின் சண்டையால், ஓடைக்குள் பாய்ந்த காதலி!
இரு காதலர்கள் சண்டையிட் டுக் கொண்டபோது இடையில் நுழைந்த காதலி பாலத்திலிருந்து ஓடைக்குள் குதித்த சம்பவமொன்று பமுனுகமவில் இடம்பெற்றுள்ளது.
பெற்றோரின் விருப்பத்தின்படி திருமணம் செய்துகொள்ள நாள் குறித்துள்ள இளைஞனும் யுவதியும் திருமண பந்தத்தில் இணையவிருந்த சந்தர்ப்பத்தில் யுவதி வேறொரு இளைஞனுடன் காதல் கொண்டுள்ளார்.
இவர்கள் இருவருமே கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதுடன் ஒருநாள் பமுணுகம ஹெமில்டன் ஓடையின் பாலத்தின் மேல் காதல்மொழி பேசிக் கொண்டிருந்தபோது திருமணம் செய்து கொள்ளவிருந்த இளைஞன் கடமை முடிந்து பஸ் வண்டியை விட்டு இறங்கும்போது பார்த்துள்ளார்.
பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதைப் பார்த்த யுவதி பாலத்திலிருந்து கீழே ஓடையில் குதித்துள்ளார். அயலவர்கள் யுவதியை காப்பாற்றி வீட்டில் சேர்த்துள்ளனர்.
Average Rating