சவூதி நிலக்கரி நிறுவனத்தில் நச்சுவாயு கசிவு இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மரணம்!

Read Time:1 Minute, 33 Second

dead-body-001சவூதி நிலக்கரி நிறுவனத்தில் நச்சுவாயு கசிவு இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மரணம்!: பாதிக்கப்பட்ட நிலையில் மேலுமொரு இலங்கையர் வைத்தியசாலையில்..-
சவூதி அரேபியாவிலுள்ள நிலக்கரி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவு காரணமாக இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலுமொருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் திங்களன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 34 வயதான ஜானக விக்ரமாராச்சி என்பவரே உயிரிழந்தவராவார். நச்சுவாயு காரணமாகப் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரும் இலங்கையராவார் என சவூதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முழுமையாக மூடப்பட்டிருந்த அறையொன்றில் இவர்கள் மூவரும் தூக்கத்தலிருந்த போதே நச்சு வாயுவை சுவாசித்திருந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை சவூதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலவரத் தடுப்புப் போலீஸ்காரருக்கு முத்தம் கொடுத்து, வழக்கில் சிக்கிய பெண்
Next post 58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய, சவேந்திர சில்வாவிற்கு வீசா வழங்க கனடாவும் மறுப்பு