நிலத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் மீட்பு
Read Time:1 Minute, 10 Second
யாழ்.உரும்பிராய் பகுதியிலுள்ள பற்றைக்காணி ஒன்றில் உரப்பையினுள் சுற்றியபடி குழந்தையொன்று புதைக்கப்பட்டமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தையினை நிலத்தினுள் புதைத்தவர் அக்குழந்தையின் தாயாகயிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளைஇ நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதனாலும் குழந்தையின் சடலத்தை நீதிபதி வந்து பார்வையிடாத காரணத்தாலும் குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்படவில்லை.
குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு குறித்த சடலம் இன்று காலை மீட்கப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating