ஐந்து பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்ற ‘பேய்க்கு’ விளக்கமறியல்
Read Time:1 Minute, 17 Second
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் ‘விசாரணைக் கூண்டில் வைத்து ‘பேயாடிய’ (கலையாடிய) சம்பவமொன்று தம்புத்தேகம நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
தனது ஐந்து பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மேற்படி சந்தேகநபர் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதவான் நுவன் கெக்கிரிதெனிய சந்தேகநபரை விசாரணைக் கூண்டில் ஏற்றிய போதே அவர் திடீரென கத்தி கூச்சலிட்டதுடன் பேயாடியுள்ளார்.
சில நிமிடங்கள் வரை இவர் தன்னை மறந்த நிலையில் பேயாடியதை அடுத்து அவரை எதிர்வரும் ஜனவரி இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைவிடப்பட்ட ஐந்து பிள்ளைகளையும் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Average Rating