அமெரிக்காவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் தீ அனர்த்தம்
Read Time:1 Minute, 13 Second
அமெரிக்க வட டகோதா மாநிலத்தில் எண்ணெயை ஏற்றிச் சென்ற புகையிரதமொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் பல மைல் தொலைவிற்கு அவதானிக்கப்பட்டு ள்ளது.
கஸெட்டன் நகருக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தையடுத்து சுமார் 2,300 பேர் அப்பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த அனர்த்தத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேற்படி அனர்த்தத்தின் போது ஒரு மைல் நீளமான புகையிரதத்தின் சுமார் 50 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
இதனையடுத்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் பெருமளவு தீயணைப்புப் படைவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
Average Rating