சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அவசியம் -ஐ.தே.க
Read Time:1 Minute, 9 Second
தேர்தல் ஆணைக்குழுவை செயற்படுத்தாமல் நீதியான மற்றும் அமைதியான தேர்தலை நடத்த முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
103ஃ2 அரசியலமைப்பு சீர்திருத்தின் படி, நீதியான மற்றும் அமைதியான தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று ஆணையாளர்களை உள்ளடக்கியதே இந்த ஆணைக்குழுவாகும்.
எனினும் இந்த ஆணைக்குழுவிற்கு இதுவரையிலும் மூன்று ஆணையாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சாதாரண அரச அதிகாரிகளை கொண்டு தேர்தலை நடத்துவதால் அந்த தேர்தல் நீதியானதாக இருக்காது, அமைதியான தேர்தலாகவும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating