பெடரரை வீழ்த்தினார் நடால்; இறுதிப்போட்டியில் வொரின்காவுடன் மோதுகிறார்
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு ஸ்பெய்ன் வீரர் ரஃபாயெல் நடாலும் வீரர் சுவிட்ஸர்லாந்து வீரர் ஸ்டனிஸ்லஸ் வொரின்காவும் தெரிவாகியுள்ளனர்.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை 7-6 (7/4), 6-3, 6-3 விகிதத்தில் ரஃபாயெல் நடால் தோற்கடித்தார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசு வீரர் தோமஸ் பேர்டிச்சை 6-3, 6-7 (1/7), 7-6 (7/3), 7-6 (7/4) விகிதத்தில் வொரின்கா தோற்கடித்தார்.
கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியொன்றுக்கு அவர் தெரிவாகுவது இதுவே முதல் தடவையாகும்.
அவர் கால்இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நடால், -வொரின்கா ஆகியோருக்கிடையிலான ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
Average Rating