ஆஸ்திரேலியாவில் ஆசிட் வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிய இந்திய பெண் சாவு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஹாக்ஸ்டன் பார்க்கில், கடந்த மாதம் 3-ம் தேதி ஆசிட் வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிய இந்திய வம்சாவழி பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில் அப்பெண்ணின் பெயர் மோனிகா ஷெட்டி (39) எனவும், தனது முன்னாள் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சிட்னியின் மேற்கு புறநகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
ஆசிட் வீச்சுக்குள்ளான ஷெட்டி முதலில் லிவர்பூல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் லிவர்பூல் மருத்துவமனை அவரை உள்நோயாளியாக சேர்க்க மறுத்துவிட்டது.
பின்னர் அவர் கான்கார்டு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
முன்னதாக, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, லிவர்பூல் பிக்கே பார்க்கில் தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது ஒரு விசித்திரமான வழக்கு என்றும், இதில் நிறைய குழப்பம் இருப்பதாகவும் துப்பறியும் அதிகாரி ஜேம்ஸ் கூறினார். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating