பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

Read Time:1 Minute, 46 Second

1359048289STF02திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் குறித்த தகவலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், சந்கேநபர்களை கைது செய்வதற்காக குறித்த இடத்திற்குச் நேற்று இரவு சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் முச்சக்கரவண்டியில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். வேகமாக பயணித்த முச்சக்கரவண்டி குடைசாய்ந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிரடிப்படையினர் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய நபர் மினுவன்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒலுவில் கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது
Next post வடமாகாண சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை