95 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான டின் மீன்கள் கைப்பற்றல்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 95 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான டின் மீன்கள் உட்பட பல்வேறு உபகரணங்களை நீர்கொழும்பில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித் வீரவர்தன தெரிவித்தார்.
நீர்கொழும்பு, தலாதூவ வீதியில் அமைந்துள்ள ஜிம்மி இன்டர்நெசனல் தனியார் நிறுவனத்தின் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் குழுவினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை கைப்பறியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி ரஞ்சித் வீரவர்தன தெரிவிக்கையில்,
தொhலைபேசி மூலமாக எமக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து சுற்றி வளைப்பை மேற்கொண்டோம். இதன் போது சீனாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான 30 ஆயிரம் டின் மீன்கள், 10 ஆயிரம் கிரீன் பீஸ் டின்கள்; , 5 ஆயிரம் தானிய டின்கள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான லேசர் இயந்திரம், பிளாஸ்டிக் டின்னர் கலன் உட்பட இயந்திரங்கள் பலவற்றை கைப்பற்றினோம்.
காலாவதியான டின்களில் உள்ள திகதிகளையும் விபரங்களையும் டின்னர் மூலமாக அழி;த்துவிட்டு, லேசர் இயந்திரம் மூலமாக புதிய திகதிகளை பதித்து கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையங்கள் மூலமாக நாடெங்கும் இவற்றை விநியோகித்துள்ளனர். இது கடந்த மூன்று வருடகாலமாக இடம்பெற்றுள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் விநியோக நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. ஏனைய தினங்களில் டின்களில் மாற்றங்கள் செய்யும் வேலை இரகசியமான முறையில் நடந்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளரும் களஞ்சியசாலை பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating