தொழில் தருவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம்; பாடசாலை அதிபர் கைதாகி விளக்கமறியலில்!
Read Time:1 Minute, 9 Second
தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 35 வயது திருமணமான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக வெல்லவாய கல்வி வலயத்தைச் சேர்ந்த பெலவத்தை பகுதியிலுள்ள பாடசாலை அதிபரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த அதிபரை வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை நாளை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிபதி செல்வி ஜனிதா பெரேரா உத்தரவிட்டார்.
35 வயதான இப்பெண்ணுக்கு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தங்கும் விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating