அளவுக்கதிகமாக உணவு நீரை உட்கொண்டதால் பெண்ணின் வயிறு வெடிப்பு
அளவுக்கதிகமாக உணவையும் நீரையும் உள்ளெடுத்ததால் பெண்ணொருவரின் வயிறு வெடித்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி 58 வயது பெண் அளவுக்கதிகமான உணவையும் நீரையும் உட்கொண்ட வேளை அவரது வயிறு வீங்கி கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனையடுத்து ஜியாங்ஜூ மாகாணத்திலுள்ள நன்சிங் டிரட் டவர் மருத்துவமனையில் அவருக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வேளை வயிற்றில் உணவின் காரணமாக பெரும் அமுக்கத்திலிருந்த வாயு வெடித்துள்ளது.
இதன்போது மின்சார சத்திர சிகிச்சை உபகரணத்துடன் அந்நபரின் வயிற்றிலிருந்த எதைல் அற்ககோல் தொடுகையுற்றதால் வெடிப்பும் அதனைத் தொடர்ந்து தீயும் ஏற்பட்டதாக மேற்படி அறுவைச்சிகிச்சைக்கு தலைமை தாங்கிய மருத்துவரான வாங் ஹலோ தெரிவித்தார்.
வழமையாக ஒருவர் உண்ணும் போது அவரது வயிறு நிரம்பியுள்ளதை அவர் உணர முடியும். ஆனால் உணவுடன் மதுபானத்தை (அற்ககோல்) அருந்தும் போது உணவால் வயிறு நிரம்பியுள்ளதை வெளிப்படுத்தும் உடல் சமிக்ஞையை அவர் அலட்சியம் செய்ய நேரிடுகிறது.
Average Rating