வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்
Read Time:51 Second
வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது மிரிஹான பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating