சிறுவர் துஷ்பிரயோகம்; சிறுவர் நிலைய ஊழியர் கைது
Read Time:58 Second
சிறுவர்கள் மூவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மஹரகம சிறுவர் நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், தாம் கடமைபுரியும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சிறுவர்கள் மூவரையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
13 மற்றும் 12 வயதான சிறுவர்களே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தம்புள்ள பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவராவர்.
Average Rating