பாடசாலையில் இருந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி மீது, வல்லுறவு முயற்சி
Read Time:1 Minute, 5 Second
பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிலாபம் – நல்லதரன்கட்டுவ, முத்துபந்திய பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவியே நேற்று இவ்வாறு வல்லுறவு சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
பாடசாலை முடிந்து துவிச்சக்கர வண்டியில் வீடு சென்று கொண்டிருந்த போது இடையில் தன்னுடன் முச்சக்கர வண்டியில் வந்த நபர் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டதாக குறித்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மாணவி வைத்திய பரிசோதனைக்கென சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating