த்ரில் படத்துக்கு, வடிவேலுவின் டயலாக்
Read Time:1 Minute, 17 Second
வடிவேலு பேசிய காமெடி பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே பிரபலம். ஒரு படத்தில் தன்னை கடத்தி சென்று ரவுடிகள் அடித்ததுபற்றி கூறும்போது, எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா இவ ரொம்ப நல்லவன்டா என்று சொன்னதால் அடியை பொறுத்துக்கொண்டதாக சொல்லி வயிற்றை பதம் பார்ப்பார். அந்த வசனத்தை குறிக்கும் வகையில் ரொம்ப நல்லவன்டா நீ என்ற பெயரில் புதிய படம் உருவாகிறது.
இப்படம்பற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறியதாவது:த்ரில்லர் கதையை காமெடியாக சொல்லும் ஸ்கிரிப்ட் என்பதால் இந்த டைட்டில் வைக்கப்பட்டது.
செந்தில் ஹீரோ. மலையாள நடிகை ஸ்ருதி பாலா ஹீரோயின். ரேகா, வெ.ஆ.மூர்த்தி, இமான் அண்ணாச்சி, சர்வஜித் ஆகியோருடன் நானும் (வெங்கடேஷ்) நடிக்கிறேன். பிரேம், ராமதாஸ் இசை அமைக்கின்றனர். தீபக்குமார், ஷெனாய்மாத்யு தயாரிக்கின்றனர்.
Average Rating