யாழ். பல்கலைகழக மாணவர்களிடையே மோதல்; 6 பேர் கைது
Read Time:1 Minute, 13 Second
யாழ். பல்கலைகழகத்தின் நுண்கலைப் பீட மாணவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று முற்பகல் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களில் பல்கலைகழக மாணவர்கள் 5 பேரும் வெளிநபர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணைகளை அடுத்து நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ் பல்கலைகழகத்தில் கடந்த சனிக்கிழமை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Average Rating