கழிவறைக்கு சென்ற மாணவியை, நிர்வாண படமெடுக்க முயற்சித்த இளைஞன் கைது
குருணாகல் பிரதேசத்திலுள்ள நூலகம் ஒன்றின் கழிவறைக்கு மாணவியொருவர் சென்ற போது கைத்தொலைபேசி மூலம் மலசல கூடத்துக்குள் வீடியோ எடுத்த போது மாணவியின் சமயோகிதத்தால் வீடியோ எடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குருநாகல் நகரைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
நூலக மலசல கூடத்துக்கு மாணவி சென்ற போது அதற்கருகில் கைத்தொலைபேசியுடன் சந்தேகத்துக்கிடமான நபரொருவர் நிற்பதைப் பார்த்த மாணவி அவதானமாக இருந்துள்ளார்.
தாம் மலசல கூடத்துக்குள் சென்ற போது அந்த நபர் மலசல கூட கதவிலிருந்த துவாரம் வழியாக கைத்தொலைபேசியில் வீடியோ செய்யப்படுவதைப் பார்த்து உடனடியாகப் பாய்ந்து இளைஞனின் கையிலுள்ள கைத்தொலைபேசி பறித்துக் கொண்டுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
மாணவி நூலக பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் கைத்தொலைபேசியை குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் கைத்தொலைபேசியிலுள்ள தகவல்களைக் கொண்டு இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
Average Rating