பெண் கழுத்து வெட்டிக் கொலை; கணவர் கைது
Read Time:1 Minute, 9 Second
காலி மாவட்டம் மீடியாகொட – கல்துவ பகுதி கிணறு ஒன்றுக்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் மீடியாகொட – மஹவெல பகுதியைச் சேரந்த 32 வயதுடைய பெண்ணினுடையது எனத் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கள்ளத் தொடர்பு பற்றி ஏற்பட்ட சந்தேகத்தினாலேயே இந்தக் கொலை இடம்பெற்றிறுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர் இன்றையதினம் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating