மனைவியின் கழுத்தை, வாளினால் அறுக்க முற்பட்ட கணவன் கைது
Read Time:1 Minute, 14 Second
தனது மனைவியின் கழுத்தை மரம் அறுக்கும் இயந்திர வாளினால் அறுத்து கொலை செய்ய முற்பட்ட நபரொருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஒருவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தினமும் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் சம்பவ தினம் மரம் அறுக்கும் இயந்திரத்தினால் மனைவியின் கழுத்தை அறுக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது அப்பெண் அந்த நபரிடமிருந்து தப்பிச் சென்று பொலிஸ் அவசர சேவை 119 பிரிவிற்கு அறிவித்ததினையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating