தூக்கில் தொங்கிய நிலையில், மாணவி சடலமாக மீட்பு
Read Time:1 Minute, 0 Second
வெலிமடை சில்மியாபுர பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று மாலை 4.30 அளவில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சில்மியாபுரவைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை இன்று பிற்பகல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.
Average Rating